செய்திகள்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » செய்திகள் » April 2023

DSI சாம்சன் குழுமம் பிரபல சட்ட நிபுணரான உதித எகலஹேவாவை தலைவராக நியமித்தது.

வெளியிட்ட நாள் 24 April, 2023

இலங்கையில் பாதணிகள் மற்றும் சைக்கிள் டயர்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள வர்த்தக நிறுவனமான னுளுஐ சாம்சன் குழுமம், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் திரு உதித எகலஹேவா ஜனாதிபதி சட்டத்தரணியை தலைவராக நியமிப்பதாக அறிவித்துள்ளது.

திரு. எகலஹேவா பொதுச் சட்டம் மற்றும் வணிகச் சட்டத்தில் ஒரு முன்னணி பயிற்சியாளராக உள்ளார், 32 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைப் பெற்றவர். அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அவர் ஒரு சிரேஷ்ட அரச ஆலோசகராகவும், அடிப்படை மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் சட்டத்தின் பல்வேறு பகுதிகளைக் கையாள்வதில் ஒரு ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் பல கல்வி மற்றும் தொழில்முறை நிறுவனங்களில் சிரேஷ்ட வருகை விரிவுரையாளராக உள்ளார். திரு. எகலஹேவா அவர்கள் 40 இற்கும் மேற்பட்ட கல்வி வெளியீடுகளை வெளியிட்டுள்ளார் மற்றும் சட்டம் தொடர்பான தலைப்புகளில் 30 இற்கும் மேற்பட்ட பொது விளக்க உரைகளை வழங்கியுள்ளார். அவரது சட்ட நடைமுறைக்கு மேலதிகமாக, எகலஹேவா PC தற்போது பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத பல நிறுவனங்களில் ஒரு சுயாதீன இயக்குனராக பணியாற்றுகிறார். அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டம் (பொது சட்டம்) (எல்எல்எம்), மால்டாவின் சர்வதேச கடல்சார் சட்ட நிறுவகத்தில் இரண்டாவது முதுகலை பட்டம் (கடல் மற்றும் கப்பல் சட்டம்) (எல்எல்எம்) மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் காப்பீட்டு சட்டத்தில் முதுகலை டிப்ளோமா ஆகியவற்றைப் பெற்றுள்ளார். சர்வதேச கடல்சார் சட்ட நிறுவனத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு பேராசிரியர் வால்டர் முல்லர் விருது வழங்கப்பட்டது.

ஒரு தலைவராக, திரு. எகலஹேவா தனது பரந்த அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டு, இந்த ஆண்டு அதன் வைர விழாவைக் கொண்டாடும் DSI சாம்சன் குழுவை வழிநடத்தி முன்னோக்கி நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முக்கிய பாதணி வணிகத்திற்கு அப்பால் பலதரப்பட்ட வணிகங்களாக விரிவடைந்துள்ள குழுமம், 3வது தலைமுறை நிறுவனத் தலைவர் மறைந்த திரு.டி. சாம்சன் ராஜபக்ஷவால் நிர்வகிக்கப்படுகிறது. திரு. எகலஹேவாவின் நியமனம், குழுவின் கூட்டாண்மை ஆளுகை மற்றும் மூலோபாய முடிவெடுத்தலை வலுப்படுத்தி, எதிர்வரும் ஆண்டுகளில் வளர்ச்சி மற்றும் வெற்றியை அடைவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

D. சாம்சன் ரூ சன்ஸ் (பிரைவட்) லிமிடெட்டின் முன்னாள் தலைவர் அவரின் பதிலாள் நியமனம் குறித்து கருத்து தெரிவிக்கையில், நிறுவனத்தின் நிதிச் செயல்பாட்டில் திருப்தி அடைந்துள்ளதாக கூறினார். மேலும் குழு உறுப்பினர்கள், நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் ஒத்துழைத்த அனைத்து பங்குதாரர்களின் கூட்டு முயற்சியின் விளைவாக னுளுஐ தற்போது அதன் வலுவான நிதி நிலையில் உள்ளது” எனக் கூறினார். ய்

திரு. எகலஹேவா, இவ்வாறானதொரு வெற்றிகரமான மற்றும் பலதரப்பட்ட கூட்டுத்தாபனத்தை வழிநடத்தும் வாய்ப்பிற்காக தனது நன்றியைத் தெரிவித்த அதேவேளை, நிறுவனத்தின் இலட்சிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், சபை மற்றும் பங்குதாரர்களுடன் நெருக்கமாகச் செயற்பட்டு தொடர்ச்சியான வெற்றியைப் பெறுவதற்கும் தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினார். “DSI இன் புதிய தலைவராக, இத்தகைய வளமான வரலாறு மற்றும் வலுவான வெற்றியின் பாரம்பரியம் கொண்ட நிறுவனத்தை வழிநடத்துவதில் நான் பெருமிதம் கொள்கின்றேன். வெற்றிக்கான திறவுகோல் ஒத்துழைப்புதான் என்று நான் நம்புகிறேன், மேலும் புதுமைகளை உருவாக்கவும், செயல்திறனை மேம்படுத்தவும், எங்கள் போட்டித்தன்மையை மேம்படுத்தவும், DSI சாம்சன் குழுமத்தில் உள்ள திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த குழுவுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒன்றாக, நாங்கள் நிறுவனத்தை தொடர்ந்து வளர்ச்சியடைய செய்து, எங்கள் பங்குதாரர்கள் அனைவருக்கும் மதிப்பை உருவாக்குவோம், ”என்று அவர் மேலும் கூறினார்.

DSI சாம்சன் குழுமம் 52 ஆண்டுகளுக்கும் மேலான வளமான வரலாற்றைக் கொண்ட இலங்கையின் முன்னணி வர்த்தக நிறுவனமாகும். இந்த நிறுவனம் உயர்தர பாதணிகள் மற்றும் சைக்கிள் டயர்களை தயாரிப்பதில் புகழ்பெற்றது, ஆண்டு வருமானம் 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இது உலகளாவிய அளவில் 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, மேலும் Clarks, Redtape, Reebok, Puma, Fila, U.S Polo, Adidas, Arror, W, Modare, Inc.5, Aurelia, Asics, மற்றும் Von Welix போன்ற சர்வதேச வர்த்தகநாமங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இலங்கையில் நாடு முழுவதும் உள்ள 200 ஷோரூம்கள் மற்றும் 5,000 டீலர்களுடன் உள்ளுர் மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு சேவை செய்யும் 23 துணை நிறுவனங்களை கொண்டுள்ள இந்தக் குழு இலங்கையில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். குழுவானது ஒரு பொறுப்புள்ள பெருநிறுவன குடிமகன், உள்ளுர் சமூகத்திற்கு பயனளிக்கும் திட்டங்களை மேற்கொள்வது மற்றும் சமூகப் பொறுப்பிற்கான அதன் அர்ப்பணிப்பை நிரூபிப்பதில் பெருமிதம் கொள்கிறது. அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள், வலுவான வணிக நெறிமுறைகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன், DSI சாம்சன் குழுமம் இலங்கையின் வர்த்தக நிலப்பரப்பில் முன்னணி வீரராக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அனுப்பியவர் தலைமை செய்திகள்

தலைமை அலுவலகம்

DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.

தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)